உள்ளூர் செய்திகள்

தந்தை உடலுக்கு மயானம் வரை வந்து இறுதி சடங்கு செய்த பட்டதாரி மகள்

Published On 2022-08-20 08:48 GMT   |   Update On 2022-08-20 08:48 GMT
  • தந்தை உடலுக்கு மயானம் வரை வந்து மகள் இறுதி சடங்கு செய்தார்
  • ஆலங்குடி அருகே நெகிழ்ச்சி சம்பவம்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இருசக்கர வாகன மெக்கானிக்கான இவர் நேற்று உடல்நலைக்குறைவால் இறந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை அவர்கள் செய்தனர்.

இதையடுத்து இறந்த சேகருக்கான மயானக்கரை கொள்ளி வைக்கும் சடங்குகளை செய்வதில் உறவினர்கள் கேள்வி எழுப்பினர். இறுதியில் அவரது மூத்த மகளான ஆனந்தி என்ற பட்டதாரி மகள் தந்தைக்கான காரியங்களை நானே செய்கிறேன் என்று கூறினார். அதன்படி மயானம் வரை சென்ற அவர் தந்தையின் உடலுக்கு தீ மூட்டினார்.

ஆண்பிள்ளை இல்லாத குறையை தீர்த்து தனது தந்தைக்கு கொள்ளி வைத்த பட்டதாரி பெண் ஆனந்தியை அங்கு வந்த உறவினர்கள் மற்றும் ஊரார்கள் பாராட்டினர்.

இதற்கிடையே ஆலங்குடி இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் இறந்த சேகர் குடும்பத்திற்கு இறுதி சடங்குகள் செய்வதற்காக ரூ.20 ஆயிரம் வழங்கி உதவி செய்தனர்

Tags:    

Similar News