உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

Published On 2023-04-13 12:59 IST   |   Update On 2023-04-13 12:59:00 IST
  • விராலிமலையில் பரிதாபம்
  • விராலிமலை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை

விராலிமலை, 

விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் கலிங்கக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகன் நித்தியானந்தம் (வயது 24). இவர் விராலிமலை அருகே உள்ள தனியா கார் உதிரி பாகம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கொடும்பாளூர் ஐ.டி.ஐ. அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் நித்தியானந்தம் உயிரிழந்தார். தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News