உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி வாலிபர் படுகாயம்

Published On 2023-03-04 15:31 IST   |   Update On 2023-03-04 15:31:00 IST
  • அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதி விபத்து
  • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

ஆலங்குடி, 

ஆலங்குடி அருகே உள்ள கட்ராம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் கதிரேசன் (வயது 42). இவர் சாலையோரம் பாத சாரியாக நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் கதிரேசன் பலத்த காயமடைந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இதையடுத்து கதிரேசன் வடகாடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்கு பதிவு செய்து செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News