உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-05-11 13:13 IST   |   Update On 2023-05-11 13:13:00 IST
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை ஆலங்குடி அருகே கே.வி.கோட்டை ஊராட்சி பிலாப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் விஜய் (வயது 26). என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு சென்ட்ரிங் தொழில் செய்து வந்தார். இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் இன்று வீட்டின் எதிரே உள்ள புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News