உள்ளூர் செய்திகள்

விராலிமலை கூத்தக்குடி சாலையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி ஆய்வு

Published On 2023-06-21 12:55 IST   |   Update On 2023-06-21 12:55:00 IST
  • விராலிமலை கூத்தக்குடி சாலையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை ஆய்வு மேற்கொள்ளபட்டது
  • முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடிக்கால்பட்டி கூத்தக்குடி செல்லும் சாலையை மேம்படுத்தி கோரை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணியினை முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுமார் ரூ.3 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்த பணியினை ஆய்வு செய்த அவர், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தினார். ஆய்விற்கு வந்த விஜயபாஸ்கரை சந்தித்த, அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற்றிக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.இந்த ஆய்வின் போது அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பழனியாண்டி, நாகராஜ், விராலிமலை ஊராட்சி மன்ற துணை தலைவர் தீபன் சக்கரவர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், வேலுமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News