உள்ளூர் செய்திகள்
சாலை சீரமைக்க கோரி மறியல் போராட்டம்
- சாலை சீரமைக்க கோரி மறியல் போராட்டம் நடைபெற்றது
- அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம் பிரிவு சாலை முதல் இரும்பாளி வரையிலான சுமார் 6 கி.மீ. பழுதடைந்த கிராம சாலையை செப்பனிடாததை கண்டித்து, திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் பேருந்து நிறுதம் அருகே கிராம மக்ள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளூர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சிதிலமடைந்த சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து ெ சன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.