- எஸ்.டி.பி.ஐ. கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது
- குற்றங்களை தடுக்க சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும்
புதுக்கோட்டை:
ஆலங்குடியில் எஸ்டிபிஐ கட்சி 14-வது ஆண்டு தொட தினம் மற்றும் வெறுப்பு அரசியல் எதிர்ப்பு பொதுக்கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆலங்குடி பள்ளிவாசல் தெருவில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு நகர செயலாள ர் அப்துல்ராஜா தலைமை வகித்தார். நகர தலைவர் முகமது முஹைதீன் அனைவரையும் வரவேற்றார்.
ஆலங்குடி தொகுதி து ணைத் தலைவர் ராயல் கனி எஸ்டிபிஐ கட்சியின் அப்துல் சுபஹான், மருத்துவர் அணி தலைவர் டி எஸ் எம் ஜமால்முகமது ஆகியோர் முன் னிலையில் வகித்தனர்.
மயானம் அமைக்க இடம் தேர்வு செய்ய வேண்டும். ஆலங் குடி அரசமரம் மற்றும் பழைய நீதிமன்றம் அருகில் உள்ள இரண்டு டாஸ்மார்க் கடைகளை அப்புறப்படுத்தவும், ஆலங்குடியில் குற்றங்களை தடுக்க சி.சி.டி.வி. கேமரா அமைக்கவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட தலைவர்கள் ஸலாஹுதீன், நபிஷா பேகம், அபூபக்கர் சித்திக் , மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். ஆலங்குடி கிளை தலைவர் பீர் முகமது நன்றி கூறினார்.