- பேரணியுடன் தொடங்கியது
- முக்கிய வீதிகளில் ஊர்வலம்
புதுக்கோட்டை,
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது.அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் 10-வது மாநில மாநாட்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் இருந்து பல வாகனங்களில் ஆயிரக்கணக்கான விவசா யத் தொழிலாளர்களும், செம்படைத் தோழர்கள் நேற்று புதுக்கோட்டையில் குவிந்தனர். புதுக்கோட்டை பால்பண்ணை ரவுண்டா னாவில் தொடங்கிய பேரணியை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.ச ண்முகம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
சீருடை அணிந்த பெண்களின் கொடி அணிவகுப்பு, சீருடை ஆண்களின் கொடி அணிவகுப்பு, செண்டை மேளம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆட்டக்கலைகள், வாண வேடிக்கைகள், கொள்கை முழக்கங்களுடன் தொடங்கி ய இப்பேரணியானது திலகர்திடல், பழநியப்பா முக்கம், மேல ராஜவீதி, தெற்கு நான்காம்வீதி, அண்ணாசிலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. பேரணியில் அகில இந்திய, மாநிலத்தலைவர்களைத் தொடர்ந்துமாவட்ட வாரியாக பல்லாயிர க்கணக்கானோர் அணி வகுத்து வந்தனர். பேரணி யானது பொதுக்கூட்டம் நடைபெறும் சின்னப்பா பூங்காவில் நிறைவடைந்தது.பொதுக்கூட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர் தலைமை வகித்தார். அகில இந்தியத் தலைவர் ஏ.விஜயராகவன் சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிஷ்ணன், சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.வெங்கட் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநில செயலாளர் எம்.சின்னதுரை எம்எல்ஏ. சிபிஎம் மாவ ட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், வி.தொ.ச. மாநில செயலாளர் அ.பழநிசாமி, துணைத் தலைவர் பி.வசந்தாமணி உள்ளிட்டோர் பேசினர்.
முன்னதாக மாநில பொருளாளர் எஸ்.சங்கர் வரவேற்க, வரவேற்புக்குழு பொருளாளர் கி.ஜெய பாலன் நன்றி கூறினார். பொதுக்கூட்டத்தில் ஆலங்குடி விடியல் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.