உள்ளூர் செய்திகள்

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஆலங்குடியில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு

Published On 2023-06-12 13:03 IST   |   Update On 2023-06-12 13:03:00 IST
  • தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஆலங்குடியில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது
  • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாமபுரீஸ்வரர் திருக்கோலில் மற்ற கோவில்களில் இல்லாத சிறப்பாக ஆதி கால பைரவர் மற்றும் காசி கால பைரவர் என 2 பைரவர்கள் அருள்பாளித்து வருகின்றனர். இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம், திராட்சை, சாத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு விபூதி அலங்காரத்தில் பைரவர் காட்சி அளித்தார். பின்னர் ஆலயத்தில் உட்புறமாக உற்சவ பைரவர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் பைரவருக்கு உரிய நிறமான சிவப்பு நிறக்கயிறும், பிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News