உள்ளூர் செய்திகள்

சோழீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு

Published On 2022-07-22 07:34 GMT   |   Update On 2022-07-22 07:34 GMT
  • சோழீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
  • 16 வகையான பொருட்களுடன் அபிஷேகங்கள்

புதுக்கோட்டை:

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடக்கமாக சிவாச்சாரியார் கணேஷ் குருக்கள் தலைமையில் சிறப்பு யாக, பூரணாகுதி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து காலபைரவருக்கு பால், பழங்கள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களுடன் அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, புனுகு மற்றும் வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.‌ பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை தேய்பிறை அஷ்டமி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News