உள்ளூர் செய்திகள்
- சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
- மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்க
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியில் டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில், கொத்தமங்கலம் ஆரம் சுகாதார நிலையம், திருவரங்குளம் வட்டா ர நடமாடும் மருத்துவக்குழுவினர் மூலம் கொத்தமங்கலம் கிழக் கு அரசுப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டன. மேலும், மக்கள் அதிகளவில் கூடக்கூடிய கோயில்கள், அரசு வளாகங்கள், பள்ளிகள், பேருந்து நிறுத்தம், கடைவீதிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் தண்ணீர் தேங்காத வகையில் தூய்மைபடுத்தப்பட்டன.