உள்ளூர் செய்திகள்

பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2023-06-18 12:39 IST   |   Update On 2023-06-18 12:39:00 IST
  • பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை:

பொன்னமராவதி அருகே வெள்ளையாண்டிப்பட்டி சிவபுரத்தில் அகத்தியர் சிவசித்தர் பீடத்தில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பகவதி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை அம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சென்னை, கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News