உள்ளூர் செய்திகள்

கடைகளை உடைத்து கொள்ளை

Published On 2022-09-19 11:19 IST   |   Update On 2022-09-19 11:19:00 IST
  • கடைகளை உடைத்து கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • பணம், மடிக்கணினிகளை திருடி சென்றனர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் ஊராட்சி இச்சடி கறம்பக்குடி சாலையில் உள்ள செட்டியாப்பட்டி விளக்கு சாலை அருகில் ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான தனியார் காம்ப்ளக்ஸ் ஒன்று உள்ளது. இந்த காம்ப்ளக்ஸ் கடையில் மூன்று கடைகள் வாடகைக்கு இயங்கி வருகின்றன. இந்நிலையில் மூன்று கடைகளில் கதவை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பணம் , மடிக்கணினிகளை திருடி சென்று விட்டது. இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில், செம்பட்டிவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து கடையை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மகும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News