அக்கினி ஆற்றில் மண் அள்ளிய மாட்டுவண்டிகள் பறிமுதல்
- அக்கினி ஆற்றில் மண் அள்ளிய மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- 5 ேபர் கைது ெசய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை:
கறம்பக்குடி அருகே உள்ள நெய்வேலி அக்கினி ஆற்றில் மாட்டு வண்டியில் மண் அள்ளி வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மணல் கடத்தலை தடுக்க புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவிட்டார்.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட எல்லையான கறம்பக்குடியை மணலுடன் மாட்டு வண்டிகள் கடக்க முயற்சி செய்த போது, புதுக்கோட்டை கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகரெத்தினம் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதில் மணல் கடத்தி வந்த 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இடையாத்தி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 58), ரெங்கராஜ் (45), ரெங்கசாமி (27), சிதம்பரம் (72), பழனி (45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முத்துச்சாமி (47) என்பவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இது தொடர்பாக கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.