உள்ளூர் செய்திகள்
மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை.
- மர்ம காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது
- இதனால் மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பெரியோர்கள், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே இந்த மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் மருத்துவக் குழுவினருடன் சேர்ந்து ஆலங்குடி பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.