உள்ளூர் செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபர் விபத்தில் பலி

Published On 2022-11-04 14:48 IST   |   Update On 2022-11-04 14:48:00 IST
  • ரியல் எஸ்டேட் அதிபர் விபத்தில் பலியானார்
  • இரு சக்கர வாகனத்தில் வந்தபோது பஸ் மோதியது

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மகாராஜபுரம் திருவப்பூர் பகுதியை சேர்ந்தவர் தங்கையா மகன் விஜயன் (வயது 50). இவர் வீட்டு மனைகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் இவர் இடம் விற்பது, வாங்குவது மற்றும் தேவைப்படுவர்களுக்கு அவர்களுக்குரிய இடத்தை விலை பேசி முடித்து தருவாராம்.

இதனால் எந்த நேரமாக இருந்தாலும் தனது வாடிக்கையாளர் அழைக்கும் போது தனது இருசக்கர வாகனத்தில் சென்று அவர்களை பார்த்து தொழில் ரீதியாக பேசிவிட்டு வருவாராம்.

இந்நிலையில் நேற்று இரவு வாடிக்கையாளர்களை சந்தித்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வருமான வரி அலுவலகம் முன்பாக வந்த போது, எதிரே வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் தலை நசுங்கி விஜயன் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரியல் எஸ்டேட் அதிபர் விபத்தில் இறந்த செய்தி அறிந்து அப்பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Tags:    

Similar News