ஆலங்குடி அருகே புனித வனத்து அந்தோணியார் கோவிலில் பொங்கல் விழா
- ஆலங்குடி அருகே புனித வனத்து அந்தோணியார் கோவிலில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது
- பொங்கல் உணவு பீடத்திற்கு கொண்டு வந்து மந்தரித்தபின் பரிமாறப்பட்டது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்கலம் புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தில் பொங்கல் வைத்து பங்கு குருக்களால் திருப்பலி பூஜை நிறைவேற்றட்பட்டது. தமிழகத்தில் கொண்டாடும் அந்தோணியார் பொங்கல் ஜனவரி மாதம் 17ஆம் தேதி தமிழ் மாதமாகிய தை மூன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினத்தில் ஆடு, மாடு, கோழி என தோட்டத்தில் பயன்படும் கருவிகளான கத்தி, அரிவாள், மண்வெட்டி, களைக்கொத்து, மாட்டு வண்டி என அனைத்தையும் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மந்திரிக்கப்பட்டன.கிறிஸ்தவ பொதுமக்கள் சேர்ந்து 350 பொங்கல் பானைகள் கொன்டு அருள் தந்தையர்கள் முன்னிலையில் மந்திரித்து வனத்து அந்தோனியார் கோவில் வாசலில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
பின்னர் பீடத்திற்கு கொண்டு வந்து மந்தரித்தபின் பொங்கல் உணவு பரிமாறப்பட்டது. ஆலய சுவர்களிலும் வளாகத்திலும் கரும்பு தென்னை ஓலைகளால், அலங்காரங்கள் செய்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். அதுபோல் ஆலங்குடி அதிசிய அன்னை ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழா பங்கு குரு ஆர்கே அடிகளார் தலைமையில் மற்றும் பங்கு குரு கித்தேரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது.