பொன்னமராவதி அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை
- பொன்னமராவதி அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
- போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே உள்ள ஒளியமங்கலம் ஊராட்சி வெள்ளாளபட்டியைச் சேர்ந்த முத்து கோயம்புத்தூரில் ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராசாத்தி மற்றும் குழந்தைகளுடன் வெள்ளாளப்பட்டியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது மகள் கோகிலா (வயது16) அருகில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அவரது தாயார் மாடு மேய்க்க சென்று வீடு திரும்பியுள்ளார்.
வீட்டில் சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த கோகிலாவை பார்த்து ராசாத்தி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் காரையூர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்ததில் தூக்கிலிட்டு இறந்த கோகிலாவின் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.