உள்ளூர் செய்திகள்
வாக்குசாவடி மாற்றங்கள் குறித்து மனு
- வாக்குசாவடி மாற்றங்கள் குறித்து மனு அளிக்கலாம்
- கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படியும், தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அறிவுரைகளின்படியும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி ஊரக பகுதிகள் மற்றும் நகரப்பகுதிகளில் 1500 வாக்காளர்களுக்கு மேலும் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு, புதிதாக வாக்;குசாவடிகள் அமைக்கவும், மேலும் வாக்குசாவடிகளின் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் தொடர்பாகவும் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கள் பகுதி வாக்குசாவடி குறித்த மாற்றங்களுக்கு வரும் 14 -ந் தேதிக்குள் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலரிடம் மனு செய்யலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.