உள்ளூர் செய்திகள்

மரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை

Published On 2022-09-01 12:53 IST   |   Update On 2022-09-01 12:53:00 IST
  • மரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
  • பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்


புதுக்கோட்டை:

திருமயம் அருகே சீமானூர் கண்மாய் பகுதியில் உள்ள மரத்தில் ஒருவர் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் திருமயம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டவர் திருமயம் அருகே உள்ள குமரன் நகர் பகுதியை சேர்ந்த அடைக்கப்பண் மகன் சோலையப்பன் (வயது 44) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

Tags:    

Similar News