உள்ளூர் செய்திகள்

ஊட்டசத்து மாத விழிப்புணர்வு பேரணி

Published On 2022-09-04 11:35 IST   |   Update On 2022-09-04 11:35:00 IST
  • ஊட்டசத்து மாத விழிப்புணர்வு பேரணி நடந்தது
  • கலெக்டர் கவிதா ராமு தொடங்கிவைத்தார்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலிருந்து தேசிய ஊட்டசத்து மாத விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கவிதா ராமு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 'ஊட்டச்சத்து மாத விழாவிற்காக ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல்" என்ற தலைப்பில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலிருந்து துவங்கிய தேசிய ஊட்டசத்து மாத விழிப்புணர்வு பேரணியானது அண்ணாசிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம், வடக்கு ராஜ வீதி வழியாக நகர்மன்றம் சென்று நிறைவடைந்தது. இப்பேரணியில் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட 275 நபர்கள் பங்கேற்று, ஊட்டசத்தின் அவசியம் குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News