உள்ளூர் செய்திகள்

கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2022-07-26 08:18 GMT   |   Update On 2022-07-26 08:18 GMT
  • கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
  • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் நே ற்று நடைபெற்றது. கீரமங்கலம் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, கோயிலில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வீதியுலாவும் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை எழுந்தருளச்செய்து, தேரோடும் வீதிகள் வழியே ஏராளமானோர் தேரை வடம்பிடித்து இழு த்து வந்து நிலையை அடைந்தனர். இதில், கீரமங்கலம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். கீரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News