உள்ளூர் செய்திகள்
கடைவீதியில் நிறுத்திய மோட்டார் சைக்கிள் திருட்டு
- கடைவீதியில் நிறுத்திய மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்து விசாரணை நடந்து வருகிறது
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
அரிமளம் ஒன்றியம், ஆயிங்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா (வயது 50). இவர் தனது மோட்டார் சைக்கிளை ராயவரம் கடைவீதியில் நிறுத்திவிட்டு கடையில் பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் பொருட்கள் வாங்கிக்கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து செல்லையா கொடுத்த புகாரின் பேரில் அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."