உள்ளூர் செய்திகள்

லாரியில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

Published On 2023-06-13 12:52 IST   |   Update On 2023-06-13 12:52:00 IST
  • லாரியில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யபட்டார்
  • போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி- வாளரமாணிக்கம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியில் 3,948 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது லாரியை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். தப்பியோடிய டிரைவர் மீது புதுக்கோட்டை தனி வட்டாட்சியர் (பறக்கும் படை) கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று கல்லூர் நால்ரோடு அருகே நின்று கொண்டிருந்த லாரி டிரைவர் சிவகங்கை மாவட்டம் கொத்தரியை சேர்ந்த சிவலிங்கம் மகன் அருண்பிரசாத் (வயது 32 ) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News