உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் லாட்டரி விற்றவர் கைது

Published On 2023-01-01 14:51 IST   |   Update On 2023-01-01 14:51:00 IST
  • ஆலங்குடியில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்
  • ஆலங்குடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

ஆலங்குடி:

தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிகள் விற்பனை நடைபெறுவதாக ஆலங்குடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதி தெற்குப்பட்டியைச்சேர்ந்த சுப்பிரமணி (எ) தென்றல்மணி (வயது 51) என்பவர் வீட்டின் அருகே லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.600 பறிமுதல் செய்தனர். பின்னர் ஆலங்குடி சப் இன்ஸ்பெக்டர் லதா அவர் மீது பதிவு செய்து கந்தர்வகோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தார்.


Tags:    

Similar News