உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடியில் மதுவிற்றவர் கைது

Published On 2023-06-25 12:00 IST   |   Update On 2023-06-25 12:00:00 IST
  • கறம்பக்குடியில் மதுவிற்றவர் கைது செய்யபட்டார்
  • இதுகுறித்துபோலீசார் வேல்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கறம்பக்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அனுமதியின்றி மதுபானம் விற்பதாக கறம்பக்குடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தீதான் விடுதியை சேர்ந்த வேல்சாமி (வயது 54) என்பவர் அன்பு கோவில் முக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி மதுபான பாட்டிகளை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 10 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் வேல்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News