உள்ளூர் செய்திகள்

தெப்பகுளத்தில் விழுந்து உயிரிழந்த வாலிபர் குடும்பத்திற்கு நிதி உதவி

Published On 2023-06-11 07:06 GMT   |   Update On 2023-06-11 07:06 GMT
  • தெப்பகுளத்தில் விழுந்து உயிரிழந்த வாலிபர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது
  • அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

ஆலங்குடி,

ஆலங்குடி அருகே திருவரங்குளம் அரங்குளநாதர் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தெப்ப திருவிழா நடைபெற்றது. தெப்பத் திருவிழாவின் போது திருக்கட்டளை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த செல்லமுத்து மகன் சுந்தர் என்பவர் எதிர்பாராத விதமாக குளத்தில் மூழ்கி உயிரிழந்தார் இதனை தொடர்ந்து இறந்து போன சுந்தர் இல்லத்திற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார். மேலும் அரசின் மூலம் கிடைக்க வேண்டிய நிவாரண உதவிகளை விரைந்து பெற்றுத்தர அவரது பெற்றோரிடம் உறுதியளித்தார். தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி தெற்கு ஒன்றிய செயலாளர் அரு.வடிவேல் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News