உள்ளூர் செய்திகள்
- வாகன விபத்தில் விவசாயி பலியானார்
- நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்
புதுக்கோட்டை:
திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகே உள்ள சின்னக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் அரிசிக்கவுண்டர் மகன் வெள்ளைச்சாமி(வயது 50).இவர் தனது நண்பர் பொன்னுச்சாமியுடன் இருசக்கர வாகனத்தில் புதுக்கோட்டை அருகே உள்ள மேலப்பழுவஞ்சியிலிருந்து சின்னக்கவுண்டம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். ஒலியமங்கலம் வெள்ளாளபட்டி செட்டி ஊரணி அருகே சென்ற போது, எதிரே வந்த மினிவேனுடன் இவர்கள் சென்ற வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்தகாயமடைந்த வெள்ளைச்சாமி கொடும்பாளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இது குறித்து வந்த புகாரின் பேரில் காரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.