உள்ளூர் செய்திகள்
- விபத்தில் விவசாயி பலியானார்
- வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை அருகே உள்ள முதுகுளம் பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம் (வயது 52), விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டிற்கு தேவையான பொருட்களை கந்தர்வகோட்டையில் வாங்கி கொண்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக சென்று சாலையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நமச்சிவாயம் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."