உள்ளூர் செய்திகள்

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

Published On 2022-08-21 11:34 IST   |   Update On 2022-08-21 11:34:00 IST
  • மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது
  • நம்ம ஊரு சூப்பரு திட்டம்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற திட்டத்தின்கீழ், ஊரகப் பகுதிகளில் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், கலெக்டர் கவிதாராமு வழிகாட்டுதலின்கீழ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி தலைமையில் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை மாவட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தண்ணீர், சுகாதாரம் மற்றும் திட, திரவக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்துதல் தொடர்பாக மாவட்ட அளவிலான அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவித் திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்), அனைத்து துறை மாவட்ட நிலை அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கிராம ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், நம்ம ஊரு சூப்பரு பிரச்சாரம் குறித்து பொதுமக்கள் அறியும் வண்ணம் விளம்பரப்படுத்தவும், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கிராம ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் ஆகியோர்களுக்கு பிரச்சாரம் தொடர்பாக பயிற்சி அளித்திடவும், அனைத்து கிராம ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் செயல்படுத்திட அனைத்து துறை அலுவலர்களும் பங்கு கொண்டு, அது தொடர்பான அறிக்கைகளை தினசரி வழங்கிட தெரிவிக்கப்பட்டது.

பிராச்சாரத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இணை இயக்குநர் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்கள் இருப்பார். அவருக்கு உறுதுணையாக உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவித்திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) ஆகியோர் இருப்பார்கள்.

அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து நம்ம ஊரு சூப்பரு பிரச்சாரம் வெற்றிபெற செய்ய வேண்டும் என மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி தெரிவித்தார்.

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஸ்ருதி, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) ஜோஸ்மின் நிர்மலா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News