உள்ளூர் செய்திகள்

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட மாநாடு

Published On 2023-01-09 12:08 IST   |   Update On 2023-01-09 12:08:00 IST
  • புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது
  • அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட மாநாடு நடந்தது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட மாநாடு  நடைபெற்றது. தமிழ் நாடு மாநில செயலாளர் தினேஷ் சீரங்கராஜ் கலந்து கொண்டு மனறத்தின் கொடியை ஏற்றி வைத்து பேசினார். மாணவர் பெருமன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் செங்கோடன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் கைலாச பாண்டியன் மற்றும் தேசியக்குழு உறு ப்பினர் வழக்கறிஞர் பவதாரணி, இந்திய மாதர் தேசிய சம்மேள னத்தின் மாவட்டச் செயலாளர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் விஜய் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


Tags:    

Similar News