உள்ளூர் செய்திகள்
மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு அறையில் ஆய்வு
- அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது
- மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு அறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
புதுக்கோட்டை:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மூன்று மாதத்திற்கு ஒருமுறை மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவி, பேலட் யூனிட் உள்ளிட்டவைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அறைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், தனி வட்டாட்சியர் (தேர்தல்) கலைமணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.