- குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது
- மவுண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில்
புதுக்கோட்டை,
மவுண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா பள்ளியின் தலைவர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன், இணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன் தலைமையில், முதல்வர் ஜலஜாகுமாரி முன்னிலையில் நடைபெற்றது.
பள்ளியின் தலைவர் குழந்தைகளுக்கு வாழ்த்து கூறி அனைவரையும் வரவேற்று வரவேற்புரையும், வாழ்த்துரையும் வழங்கினார். அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் கலைநிகழ்ச்சிகள் மூலம் மாணவ, மாணவிகளை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தனர்.
இணைத்தலைவர் பேசும் போது, மாணவர்கள் தெளிந்த சிந்தனையோடு , கற்பதை ஆழமாக கற்று , சாதனை ஒன்றை நோக்கமாக கொண்டு, இலக்கு நோக்கி நேர்கொண்ட பாதையில் பயணிக்க வேண்டும். நன்மை தீமை என்ற இரண்டு பக்கங்கள் கொண்ட வாழ்க்கையில் நன்மையை பற்றிக் கொண்டு , தீமையில் இருந்து விலகி நடக்க வேண்டும் என்றார்.
ஆசிரிய ஆசிரியைகளின் தனித்திறமைகள் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிகழ்வாக இருந்தது என்று கூறி, பள்ளியின் முதல்வர் நன்றியுரை கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.