உள்ளூர் செய்திகள்

தலைமை செயல் அலுவலர் ஆய்வு

Published On 2023-07-04 13:46 IST   |   Update On 2023-07-04 13:46:00 IST
  • புதுக்கோட்டையில் செயல் அலுவலர் ஆய்வு நடத்தினார்
  • கோவில்பட்டி பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு நிறுவனத்தில் ஆய்வு நடைபெற்றது

பபுதுக்கோட்டை, 

கோவில்பட்டியில் செயல்பட்டு வருகிற, தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணைய லிமிடெட் நிறுவனத்தில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா, முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில், தென்னை நார்கள் மூலமாக தயார் செய்யப்பட்டு வருகின்ற துடைப்பான்கள், மகளிரால் உற்பத்தி செய்யப்படுகிற பனை ஓலைப் பொருட்களையும் மற்றும் அவைகள் தயாரிக்கப்படுகின்ற பணிகளையும், பார்வையிட்டு, அவர் அறிவுரைகளை வழங்கினார்.மேலும் மாநில இணைய சொந்த நிதியிலிருந்து ரூ.30 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பனைத்தூரிகை, பனைக் கூடம் மற்றும் அலுவலகக் கட்டடப் பணிகளை விரைந்து முடிக்கவும் அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். பனை வெல்லம் பனை ஓலை கூடையில் வைத்து விற்பனை செய்திடவும், பனை ஓலை நவீன முறையில் ஏற்றுமதி செய்யும் வகையில் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News