உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் சரக்கு ஆட்டோ திருட்டு

Published On 2022-12-28 12:11 IST   |   Update On 2022-12-28 12:11:00 IST
  • ஆலங்குடியில் சரக்கு ஆட்டோ திருட்டு போனது
  • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆலங்குடி:

ஆலங்குடி நம்பன்பட்டி சாலையில் உள்ள சர்வீஸ் கடையில், கந்தர்வகோட்டை தாலுகா வெள்ளாள விடுதி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 47) என்பவர் தனது சரக்கு ஆட்டோவை வாட்டர் சர்வீஸ் செய்வதற்காக விட்டு சென்றுள்ளார். வாட்டர் சர்வீஸ் முடிந்து விட்டதாக சர்வீஸ் செய்த சேகர், தெரிவித்துள்ளார். ஆனால் மாரிமுத்து தனக்கு வேலை இருப்பதால் மறுநாள் வருவதாக தெரிவித்து உள்ளார். சரக்கு ஆட்வாடோவை கொட்டகையில் நிறுத்திவிட்டு சேகர் அவரது வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் கடையை திறப்பதற்கு வந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து ஆலங்குடி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags:    

Similar News