உள்ளூர் செய்திகள்

கார் மோதி 8 ஆடுகள் பலி

Published On 2022-06-10 09:23 GMT   |   Update On 2022-06-10 09:23 GMT
  • கறம்பக்குடி அருகே கார் மோதி 8 ஆடுகள் பலியானது.
  • ஆடுகளுடன் மழையூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மோதியது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா தீத்தானிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே புதுக்கோட்டை மழையூர் குருவினாங் கோட்டையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சித்திரவேல், (வயது 37) இவரது தம்பி ராஜ்குமார்.

இவர்கள் இருவரும் அவரது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று வீடு திரும்பினர். அவர்கள் ஆடுகளுடன் மழையூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மோதியதில் 7 செம்மறி ஆடுகள், 1 வெள்ளாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

மேலும் பாலகிருஷ்ணன் மகன் சித்திரவேல் என்பவருக்கு தலையிலும். ராஜ்குமார் என்பவருக்கு காலிலும் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக மழையூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News