உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

Published On 2023-02-18 09:16 GMT   |   Update On 2023-02-18 09:16 GMT
  • புதுக்கோட்டை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடத்தினர்
  • நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கினர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அரசு இராணியார் மகப்பேறு மருத்துவமனையில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இங்கு நோயாளிகளுக்கும், அவர்களை பார்க்க வருபவர்களுக்கும் பயன்படும் விதமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 5 தினங்களுக்கு மேலாக இங்கு உணவகத்தில் சமையலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் கியாஸ் கொடுக்கப்படவில்லை என்பதால் பணியாளர்கள் எந்த வேலையும் செய்யவில்லை. மேலும் அங்கு பணிபுரியும் நபர்களுக்கு கூட 10 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகளிடம் புகார் சென்றுள்ளது. இந்நிைலயில் அம்மா உணவகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர் அங்குள்ள விபரத்தை கேட்டறிந்தனர். உடனடியாக சமைப்பதற்கு கேஸ் சிலிண்டர்கள் கிழக்கு மாவட்ட பார்வையாளர் சரவணன் ஏற்பாட்டில் வரவழைக்கப்பட்டது. பின்னர் அவர்கள் கொண்டு வந்த உணவு பொட்டலங்களை நோயாளிகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுக்கபட்டது. இந்நிகழ்வில் பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News