உள்ளூர் செய்திகள்

மது விற்ற முதியவர் கைது

Published On 2022-10-23 10:35 IST   |   Update On 2022-10-23 10:35:00 IST
  • மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.
  • போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ஆலங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து, போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் (வயது 70) என்பவர் மது விற்றுக்கொண்டிரு ந்ததை பார்த்த போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 20 மது பாட்டில்கள் மற்றும் ரூபாய் 1900 கைப்பற்றி ஆலங்கு டி காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் அவர் மீது ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் நித்தியா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News