உள்ளூர் செய்திகள்
ஆலங்குடி அருகே மின்னல் தாக்கி இளம்பெண் சாவு
- ஆலங்குடி அருகே மின்னல் தாக்கி இளம்பெண் உயிரிழந்தார்
- ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் சம்பவத்தன்று திடீரென பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி சிதம்பர விடுதியை சேர்ந்தவர் கோபு. இவரது மனைவி வித்யா (வயது 27). இருவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், கோபு வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் சம்பவத்தன்று திடீரென பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையின் போது வீட்டு வாசலில் காய்ந்து கொண்டிருந்த பொருட்களை வித்யா எடுக்கச் சென்றுள்ளார். அப்போது வித்யா மீது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 27 வயதே ஆன பெண் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.