உள்ளூர் செய்திகள்
- குளிக்க சென்ற போது சம்பவம்
- ணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்
புதுக்கோட்டை:
விராலிமலை அருகே நம்பம்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் கோபாலகிருஷ்ணன் (26).இவர் அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப் போது நீரில் மூழ்கி மூச்சு திணறி இறந்ததாக கூறப்படுகிறது. குளிக்க சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததை தொடர்ந்து பெற்றோர்கள் தேடும்போது கிணற்றுக்கு மேலே அவரது உடை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் .இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சகதியில் சிக்கியிருந்த கோபாலகிருஷ்ணனின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.