உள்ளூர் செய்திகள்

வழி பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

Published On 2023-01-11 12:30 IST   |   Update On 2023-01-11 12:30:00 IST
  • வழி பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்
  • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:


புதுக்கோட்டை விடுதி யைச் சேர்ந்த முத்துவீர் மகன் ரமேஷ் (வயது 42). இவர் அம்புலி ஆற்று பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவரிடம் ஆலங்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்கள் வெள்ளைச்சாமி (வயது 22), கௌதம் (19 ), மற்றும் பாரதிதாசன் சாலையை சேர்ந்த நடராஜன் மகன் கண்ணன் (30) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்தனர். இவர்களிடமிருந்து தப்பி ரமேஷ் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் சப் -இன்ஸ்பெக்டர் நதியா ஆகியோர் வழக்கு பதிவு ெ சய்து அந்த 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News