உள்ளூர் செய்திகள்

2 தனியார் உரக் கடைகளுக்கு தற்காலிக தடை

Published On 2022-11-01 14:53 IST   |   Update On 2022-11-01 14:53:00 IST
  • 2 தனியார் உரக் கடைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
  • அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரசு விதிகளை பின்பற்றாத 2 தனியார் உரக்கடைகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் தற்காலிக தடைவிதித்தனர்.

ஆலங்குடி அருகே உளள வடகாடு பகுதியில் உள்ள உரக்கடைகளில் விவசாயிகள் யூரியா உரம் வாங்க சென்றால், அதோடு அவர்கள் வழங்கும் பயிர் நண்ணூட்டமும் சேர்ந்து வாங்க வலியுறுத்துவதாக விவசாயிகள் தரப்பில் புகார் எழுந்தது. இதை தொடர்ந்து மாவட்ட வேளாண் துணை இயக்குநர் மோகன்ராஜ், உதவி இயக்குநர்(தரக் கட்டுப்பாடு ) மதியழகன், வேளாண் அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் அப்பகுதியில் உள்ள உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு விதிகளை முறையாக பின்பற்றாத 2 கடைகளில் உர விற்பனைக்கு த ற்காலிக தடைவிதித்தனர்.

Tags:    

Similar News