உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது

Published On 2022-07-25 09:05 GMT   |   Update On 2022-07-25 09:05 GMT
  • புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
  • தனிப்படை போலீசார் நடவடிக்கை

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே உள்ள இச்சடி மாதா மளிகை கடையில் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலம் விற்பதாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் வந்திதா பாண்டேவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இவரின் உத்தரவு படி விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது எஸ் மேலப்பட்டி செம்பட்டிவிடுதியைசேர்ந்த அற்புதசாமி மகன் மரியசூசை (வயது 24) இவரது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் இருப்பதை பார்த்து அதனை பறிமுதல் செய்தனர். இதே போல் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் பதுக்கி விற்பனை செய்த வடவாளம் முக்காணிபட்டியைசேர்ந்த அருளாந்து மகன் ஆரோக்சியசாமி ஆகியோரை பிடித்து, அங்கிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் செம்பட்டிவிடுதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் இருவர் மீது வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News