உள்ளூர் செய்திகள்
சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
- சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
புதுக்கோட்டை
ஆலங்குடி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இந்த தகவலின்படி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆண்டிகுளம் டாஸ்மார்க் கடை அருகில் மது விற்றுக் கொண்டிருந்த கும்மங்குளத்தை சேர்ந்த ஜெஸ்டினை கைது செய்து அவரிடமிருந்து 8 மது பாட்டில்கள் மற்றும் ரூ.1000 பறிமுதல் செய்தனர். இதேபோல் பழைய கோர்ட் அருகில் மது விற்ற பள்ளத்திவிடுதியை சேர்ந்த மதியழகனை கைது செய்து அவரிடமிருந்து 6 மதுபாட்டில் மற்றும் ரூ. 970 பறிதல் செய்தனர். பின்னர் இருவரையும் ஆலங்குடி.காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.