உள்ளூர் செய்திகள்

வாகன விபத்தில் 2 பேர் பலி

Published On 2022-06-21 13:55 IST   |   Update On 2022-06-21 13:55:00 IST
  • வாகன விபத்தில் 2 பேர் பலியானார்கள்
  • இதில் சம்பவ இடத்திலேயே சண்முகவே், ஆனந்த் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கச்சிரான்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகவேல்(வயது40). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன் ஆனந்த்(37) இவர்கள் இருவரும் ஆலங்குடியிலிருந்து திருவரங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர்.

ஆயிப்பட்டி விலக்கு பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் தூக்கிவீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சண்முகவே், ஆனந்த் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பகெ்டர் அழகம்மை வழக்கு பதிவு செய்து கந்தர்வக்கோட்டை அருகே வீரடிப்பட்டியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ரெங்கராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News