உள்ளூர் செய்திகள்

108 திருவிளக்கு பூஜை

Published On 2023-02-05 13:16 IST   |   Update On 2023-02-05 13:16:00 IST
  • வருடாபிஷேக விழா
  • ஏராளமான பெண்கள் பங்கேற்பு

ஆலங்குடி, 

ஆலங்குடி அருகே உள்ள ஆயிப்பட்டி வரசக்தி விநாயகர் செம்முனீஸ்வரர், பெரிய கருப்பர், பத்ரகாளியம்மன் மற்றும் நவகிரகங்களுக்கு 13-ம் ஆண்டு வருடபிஷேக விழாவும், 12-ம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. முதலில் விநாயகர் கோவிலில் நடைபெற்ற வருடாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. குத்துவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதற் முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதனையொட்டி சிறப்பு வானவேடிக்கை நடைபெற்றது. திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை மேலக்கோட்டை கிராமத்தார் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News