உள்ளூர் செய்திகள்

மாவட்ட அளவில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்

Published On 2023-09-22 14:58 IST   |   Update On 2023-09-22 14:58:00 IST
  • கதிராமங்கலத்தில்விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்
  • வளர்ச்சி திட்டம் மூலம் கிடைக்கும் சலுகைகள் பயிற்சிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது

அறந்தாங்கி, 

ஆவுடையார்கோவில் தாலுகா கதிராமங்கலம் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற முகாமில் வேளாண்மை உதவி இயக்குனர் சவிதா பயிற்சி குறித்து விளக்கி பேசினார். அப்போது வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்ட செயல்பாடுகள், வேளாண்மை கிடங்கில் உள்ள இடுபொருட்கள், விதை இருப்பு, நேரடி நெல் விதைப்பு தொழில்நுட்பங்கள், மானியம் மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் கிடைக்கும் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. முகாமில் அங்கக விதை சான்றளிப்பு துறை அலுவலர் இளஞ்செழியன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜகுபர்அலி, பொறுப்பு அலுவலர் இன்பசேகரன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராமநாதன், கீர்த்திகா உள்ளிட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News