உள்ளூர் செய்திகள்

புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரை மாற்றக்கோரி, காரைக்காலில் பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்காலில் பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-02-25 08:20 GMT   |   Update On 2023-02-25 08:20 GMT
  • புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறி யாளரை மாற்றக்கோரி, காரைக்காலில் பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..
  • பொதுப்பணித்துறை சிறப்பு தனி அதிகாரியாகநியமிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்யவேண்டும்

புதுச்சேரி:

புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறி யாளரை மாற்றக்கோரி, காரைக்காலில் பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.காரைக்கால் பொதுப்பணித்துறை அலுவலக வாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கப் பொறுப்பாளர் கோபால்சாமி தலைமை தாங்கினார். காரைக்கால் அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், பொருளாளர் மயில்வாகனன், துணைத் தலைவர் தமிழ்வாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், பணி ஓய்வு பெற்று, துறைக்கு தொடர்பில்லாதவர் பொதுப்பணித்துறை சிறப்பு தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்யவேண்டும். புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரின் செயல்பாடுகள் திருப்தியி ல்லாததால் அவரை பணியிடமாற்றம் செய்யவேண்டும்.காலியாக உள்ள கண்காணிப்புப் பொறி யாளர், செயற்பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் பணியடங்களை நிரப்ப வேண்டும். காலியாக உள்ள இளநிலை பொறியாளர் மற்றும் வரைவாளர் பதவிகளை தகுதி வாய்ந்த வரைவாளர், மேற்பார்வையாளர், பணி உதவியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும். அனைத்துப் பிரிவு பொறியாளர்களின் பணி நிரந்தரம், முதிர்ச்சி பட்டியலை வெளியிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News