உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

நிலக்கோட்டையில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

Published On 2023-04-18 07:06 GMT   |   Update On 2023-04-18 07:06 GMT
  • நிலக்கோட்டை தாலுகாவில் மக்கள் தொடர்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
  • இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்து பயன்பெற நிலக்கோட்டை தாசில்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிலக்கோட்டை,ஏப்.18-

நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பகுதிகளில் அனைத்து தரப்பு பொதுமக்களும் பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை,ரேஷன் கார்டு, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் மனுக்கள் பெரும் மக்கள் தொடர்பு முகாம் திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது.

நிலக்கோட்டை ஒன்றியத்திற்கு 19 -ந்தேதி நிலக்கோட்டை ஹெச்-என்.பி.ஆர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள மங்கள் பகவான் மண்டபத்தில்நடைபெறஉள்ளது. வத்தலகுண்டு ஒன்றியத்திற்குவருகின்ற 20-ந்தேதி வத்தலகுண்டு பேரூராட்சி அருகே உள்ள சமுதாயக்கூடத்தில் நடக்க இருக்கிறது.இம்முகாமில்மாவட்ட அளவிலான அதிகாரிகள் கலந்து கொண்டு அனைத்து விதமான நலத்திட்ட உதவிகளுக்கும் மனுக்கள் பெற உள்ளனர்.

எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்து பயன்பெறநிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News