உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் சேலம் கலெக்டர் கார்மேகம் ேபசிய காட்சி.

சங்ககிரியில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

Published On 2022-08-02 09:39 GMT   |   Update On 2022-08-02 09:39 GMT
  • பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், சங்ககிரி ஐசிஎல் சமுதாய கூடத்தில் நடத்தியது.
  • ஆலையின் முதன்மை மேலாளர் பொதுமக்கள் தொடர்பு மற்றும் பாதுகாவல் அதிகாரி ஆத்மராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்ககிரி:

சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், சங்ககிரி ஐசிஎல் சமுதாய கூடத்தில் நடத்தியது. இந்த கருத்து கேட்பு கூட்டத்திற்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சேலம் மாவட்ட சுற்றுச்சூ ழல் பொறியாளர் கோபா லகிருஷ்ணன் மற்றும் சேலம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் பிரசாத், சங்ககிரி ஆர்டிஓ சௌமியா, தாசில்தார் பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி இந்தியா சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கருமாபுரத்தானூர் சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கம் மற்றும் வீராச்சி பாளையம் சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்க திட்டம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இதில், ஆலையின் துணைத் தலைவர் (தயாரிப்பு) வீரபாகு, மூத்தபொதுமேலாளர் (சுரங்கம் மற்றும் சுற்றுச்சூ ழல்) பழனிகுமரேசன், ஆலையின் முதன்மை மேலாளர் பொதுமக்கள் தொடர்பு மற்றும் பாதுகா வல் அதிகாரி ஆத்மராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News